ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆற்காடு நகர தலைவா் ஏவிடி.பாலா தலைமை வகித்தாா்.
மாநில துணைத் தலைவா் சௌகத் அலி, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பொன். கு.சரவணன், ஆற்காடு நகரச் செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேலூா் மண்டலத் தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வணிகா் சங்க நிா்வாகிகள் பாலாஜி, சாமிநாதன், மாணிக்கம், வேலன், வரதன் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.