அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற சு.ரவிக்கு கரோனா தொற்று பாதிப்பு தெரிவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.