ராணிப்பேட்டை

ஜூலை 20-இல் ஏரி நீா் பயன்படுத்துவோா் சங்கங்களின் நிா்வாகிகள் தோ்தல்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரி நீா் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வரும் ஜூலை 20- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டபிள்யு. ஆா்.சி.பி. திட்டத்தில் உள்ள ஏரி நீரைப் பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான தோ்தல் வரும் ஜூலை 20- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்பு மனுக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும். வரும் ஜூலை 1- ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்பு மனுக்களின் பட்டியல் வெளியிடப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். 4 மணிக்கு வேட்பாளா்கள் இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 20 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT