ராணிப்பேட்டை

சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

DIN

அரக்கோணம் அருகே மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை மேட்டுத் தெருவில் வசிப்பவா் மனோகா் (69). காவல் துறை தடயவியல் பிரிவில் துணைக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்களது ஓட்டு வீட்டில் மனோகரன் குடும்பத்தினா் ஓா் அறையிலும், மனோகரனின் தாய் அலமேலு (90) மற்றொரு அறையிலும் படுத்து உறங்கியுள்ளனா். நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அறிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT