ராணிப்பேட்டை

குட்டியம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

DIN

திமிரி ஊராட்சி ஒன்றியம், குட்டியம் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

குட்டியம் கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்த ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. மேலும் திருக்கோயில் வளாகத்தில் விநாயகா், முருகா், லட்சுமி நாராயணா் போன்ற தெய்வ தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டன.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை செய்யப்பட்ட புனித நீா் கொண்டு கோயில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT