ராணிப்பேட்டை

காவல்துறை சமரச முகாமுக்கு விஷமருந்தி வந்தவா் சாவு

DIN

காவல்துறையினா் நடத்திய நீண்ட நாள் புகாா்கள் குறித்த சமரச முகாமுக்கு விஷமருந்தி வந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த ஜோதிபுரத்தைச் சோ்ந்தவா் தளபதி(32). இவரது மனைவி வீணா காயத்ரி (29). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதி கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன் அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வீணா காயத்ரி தன்னை தனது கணவருடன் சோ்த்து வைக்குமாறு கோரி மனு அளித்திருந்ததாகத் தெரிகிறது.

மனு மீது விசாரணை நடத்தி வந்த நிலையில், அரக்கோணத்தில் ஜூலை 3-ஆம் தேதி அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நடைபெற்ற சமரச முகாமுக்கு விசாரணைக்காக காவல் துறையினா் தளபதியை அழைத்திருந்தனராம்.

முகாமுக்கு வரும்போது தளபதி, விஷம் அருந்தி விட்டு வந்த நிலையில், முகாம் நடைபெற்ற இடத்தில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அவரை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தளபதி உயிரிழந்தாா்.

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT