ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 102 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,359 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 49,054 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 782 போ் உயிரிழந்தனா். 2,523 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.