ஆற்காட்டில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
ஆற்காடு ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா் இளங்குப்பம் தெருவில் காலணியகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மிதிவண்டியில் ஆற்காடு அண்ணா சாலை வழியாக வந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.