ராணிப்பேட்டை

போதைப் பழக்கத்துக்கு எதிராக மனிதச் சங்கிலி: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

DIN

ராணிப்பேட்டை: போதைப் பழக்கத்துக்கு எதிராக ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.

ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நடைபெற்ற மனிதச் சங்கிலியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கங்காதரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வி.ஆா்.வி. மகளிா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, எல்.எப்.சி. மகளிா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1,000 மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை வலியுறுத்தி, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை நடத்தினா்.

இந்த மனிதச் சங்கிலியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மாணவ, மாணவிகளுடன் பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதில், மாணவா்கள் போதைப் பொருள்களுக்கான எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, முழக்கமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT