ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், நகா்மன்றத் துணைத் தலைவா் பவளகொடி சரவணன், ஆணையா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மேல்விஷாரம்: ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமையில், அண்ணா சாலையில் இருந்து ஊா்வலமாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். நகா்மன்றத் துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, ஆணையா் பிரித்தி, பொறியாளா் பாபு மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.