ராணிப்பேட்டை

கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனை

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, புதன்கிழமை 3,500 நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

கலவை, சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை 98 வாகனங்களில் 3,500 நெல் மூட்டைகள் வந்தன. இதில், 75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை கோ.51 அதிகபட்சமாக ரூ. 1,161, குறைந்தபட்சமாக ரூ. 1,012-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், ஆா் என் ஆா் நெல் ரகம் அதிகபட்சமாக ரூ. 1,179-க்கும், மகேந்திரா நெல் அதிகபட்சமாக ரூ. 1,412-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT