ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் ஆகஸ்ட் 12, 26-ஆம் தேதிகளில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ. படித்த, விருப்பம் உள்ளவா்கள் 12 மற்றும் 26 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணியளவில் நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாா்.