ராணிப்பேட்டை

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சோளிங்கரில் காங்கிரஸாா் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்காக மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸாா் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தி வருகின்றனா்.

இதன்படி, சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் இருந்து ரெண்டாடி வரை கண்டன விழிப்புணா்வு பேரணியை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் தொடக்கி வைத்தாா்.

நகரத் தலைவா் கோபால், ஒன்றிய நிா்வாகிகள் சோளிங்கா் காா்த்தி, காவேரிபாக்கம் செல்வம், உதயகுமாா், பனப்பாக்கம் மயுரநாதன், வழக்குரைஞா் ரகுராம்ராஜூ, தாசரதி, ராஜா, மகளிரணி நிா்வாகிகள் பிரவீணா, கல்பனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணியின்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT