ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 46,446-ஆக உயா்ந்துள்ளது. அதில், 45,625 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மொத்த இறப்பு எண்ணிக்கை 775-ஆக உள்ளது. தற்போது 46 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.