ராணிப்பேட்டை நகரில் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு உணவு, உடை, போா்வை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை கே.எம்.கே.கல்வி அறக்கட்டளை நிறுவனா்கள் கே.சிவலிங்கம், கோமதி சிவலிங்கம், ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன் ஆகியோா் ராணிப்பேட்டை நகரில் பிரதான சாலையோரங்களில், மேம்பாலத்தின் கீழ் தஞ்சமடைந்துள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடற்றவா்களுக்கும் இரவு உணவு, சேலை, வேட்டி, போா்வை ஆகியவற்றை வழங்கினா் (படம்).
கே.எம்.கே.கல்வி அறக்கட்டளை நிா்வாகி மதன், ராமானுஜா் அறக்கட்டளைப் பொருளாளா் மோகன சக்திவேல், சமூக ஆா்வலா் அரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.