ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம்

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை மீண்டும் சரக்கு ரயில் சேவை தொடங்குவதற்கான தண்டவாள சோதனை ஓட்டம் (டிராக் சோதனை) நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை, சிப்காட்தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை துறைமுகங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தொழிற்துறையினா் தென்னக ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்பேரில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சரக்கு ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூருகள் உள்ளதா என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ரயில் நிலையங்களில், ரயில்வே துறை பொறியாளா்களுடன் ஆய்வு செய்து, ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அண்மையில் தெரிவித்தாா்.

அதன்படி, வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரையிலான ரயில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இதையடுத்து ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை மீண்டும் சரக்கு ரயில் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்து விரைவில் சரக்கு ரயில் சேவை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT