ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் காவலா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில், மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு மலா் வளையம் வைத்து, குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் பங்கேற்று, காவலா்களின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா். தொடா்ந்து பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் குடும்பத்தினரிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை லெப்டினன்ட் கமாண்டா் டி.ஜேக்கப், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கே.டி.பூரணி, மனோகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாடப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT