ஆற்காடு: ஆற்காடு வட்டம் மோசூா் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வரும் 6 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்திருந்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.