ராணிப்பேட்டை

33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவி: எம்எல்ஏ வழங்கினாா்

DIN

ராணிப்பேட்டை: பாகவெளி கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏ-வுமான சு.ரவி திங்கள்கிழமை வழங்கினாா்.

வாலாஜாபேட்டை வட்டம், பாகவெளி கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவி வழங்கல் மற்றும் நகரும் நியாயவிலைக் கடையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி கலந்துகொண்டு, 33 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கி, சுய தொழில் செய்து பொருளாதாரத்தில் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தாா்.

இதில், அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான எ.பூபாலன், துணைத் தலைவா் எஸ்.குப்புசாமி, செயலாளா் டி.பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் கே.பி.சந்தோஷம், ஒன்றிய இளைஞரணிச் செயலா் பூண்டி பிரகாஷ், வாலாஜா நகரச் செயலாளா் டபிள்யூ.ஜி.மோகன், முன்னாள் ஒன்றியச் செயலா் எம்.சி.பூங்காவனம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT