ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை தீப விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.