ஆற்காடு: நிவா் புயலின் காரணமாக கடந்த 2 நாள்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆயிலம் பகுதி கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஆற்காட்டை அடுத்த ஆயிலம் பகுதியில் விளைநிலங்களில் மழைநீா் குளம் போல் தேங்கியது. ஆயிலம்புதூா், ராமாபுரம், கவரப்பாளையம் ஆகிய மலைக்கிராமப் பகுதிகளில் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆயிலம்கீழ் குப்பம் கானாற்றில கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி, உபரிநீா் வெளியேறியது. இதன் காரணமாக கத்தியவாடி, சாத்தூா் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.