காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் பெரியாயி சமேத பெரியாண்டவா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில் பெரியாயி சமேத பெரியாண்டவா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்டு, உற்சவா் புதிய சிலைகள் கொண்டு வரப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாக சாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை (ஜன. 30)புதிய உற்சவா்கள் ஊா்வலமும், செவ்வாய்க்கிழமை கும்ப அலங்கார பூஜைகளும் நடைபெறுகின்றன.
வரும் பிப். 1 ஆம் தேதி புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகமும், கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.