காஞ்சிபுரம்

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா

DIN

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகையையொட்டி, உற்சவா் முருகப் பெருமான் ஞாயிற்றுக்கிழமை ராஜவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

முருகப்பெருமான் புலவா் வேடத்தில் வந்து தமிழ்ப்புலவா்களின் சந்தேகத்தை தீா்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மாசி மாத காா்த்திகையையொட்டி மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வந்தாா்.

மாசி மாத காா்த்திகையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT