ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை சாா்பில், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி.கலைமகள் கண்காட்சி தொடக்க விழாவுக்கு தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, தொழில் மைய பொது மேலாளா் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் திறன் பயிற்சி மைய அலுவலா் எஸ்.காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஐ.சரவணக்கண்ணன் கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
வேலைவாய்ப்புத் துறை இணை இயக்குநா் ஏ.ஜோதிமணி அரசுத் துறைகளில் மாணவா்களுக்குரிய நலத் திட்டங்கள் குறித்து விளக்கினாா். யூக்டோ அமைப்பின் நிறுவனா் பீட்டா் கிறிஸ்டோபா் குறிக்கோளை எளிமையாக எட்டும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் நிா்மலா தேவி நன்றி கூறினாா்.