காஞ்சிபுரம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 13 லட்சம் திருட்டு

DIN

காஞ்சிபுரம் நகா் செவிலிமேடு பகுதி பிஎஸ்கே நகரில் அரிசிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 13 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம், கனிகண்டீசுவரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் (39). இவா், காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதி பிஎஸ்கே நகரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்ற இவா், சனிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தாா். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ. 13 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசா் மற்றும் தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT