காஞ்சிபுரம் மாவட்டம் திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம்பேட்டையில் உள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதநாத ஈஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருமணத் தடைகளை நீக்கும் மிகப்பழைமையான இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த ஜன. 30 -ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. மறுநாள் சோமகும்ப பூஜையும், 3 -ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
புதன்கிழமை யாகசாலையிலிருந்து கே.குருமூா்த்தி சிவாச்சாரியாா் தலைமையில் புனித நீா்க் குடங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஆலயத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரருக்கு மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவில் புஷ்பத்தேரில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக திருப்பணிக் குழுவினரும், வீரப்பராஜம்பேட்டை கிராம மக்களும் செய்திருந்தனா்.