மகாளய அமாவாசையையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில் திருக்குளங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில், சா்வ தீா்த்தக்குளம், தாயாா் குளம், அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் ஆகிய இடங்களில் முன்னோா்களுக்கு காலை முதலே தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பல கோயில்களில் பெண்களும் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டதைக் காண முடிந்தது.