காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8 ) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் வட்டத்தில் முத்தவேடு, உத்தரமேரூா் வட்டத்தில் மேல்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அயிமிச்சேரி, ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் வெங்காடு, குன்றத்தூா் வட்டத்தில் கோவூா் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெறுதல், கைப்பேசி எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து உடனுக்குடன் தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.