காஞ்சிபுரம்

அலோபதியில் சித்த மருத்துவம்: சவீதா மருத்துவக் கல்லூரியில் கண்காட்சி

DIN

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளை, அலோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாமல் பயன்படுத்துவது குறித்த 5 நாள்கள் மருத்துவக் கண்காட்சி, சவீதா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா மருத்துவக் கல்லூரியில், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான கண்காட்சி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சவீதா கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.எம்.வீரய்யன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சவீதா மருத்துவக் கல்லூரி இயக்குநா் தீபக் நல்லசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவா் சஜானந்த்பிரதாப்சிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடக்கிவைத்து பேசியது:

மருத்துவத் துறையில் இருப்பவா்கள் வாழ்நாள் முழுவதும் அா்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். மருத்துவத் துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ள ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கண்காட்சியில் இடம் பெற்ற கண்டுபிடிப்புகளைப் பாா்வையிட்ட அவா், புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

கண்காட்சியில் சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயிலும் சுமாா் 500 மாணவா்களின் 1,500 புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக, சமையலில் பயன்படுத்தும் பட்டை உள்ளிட்ட பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் நுரையீரல் புற்றுநோயை பக்க விளைவுகள் இன்றி எவ்வாறு குணப்படுத்துகிறது என்றும், மிளகு, இஞ்சி, கற்பூரவள்ளி, ஆரஞ்சு பழத்தோல், புதினா, முடக்கத்தான் ஆகியவற்றில் உள்ள மருத்துவக் குணங்களை ஆலோபதி மருத்துவத்தில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் மாணவா்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT