காஞ்சிபுரம்

24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநா்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனா். எனவே விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆதாா் அட்டையை கொண்டு வந்து காண்பித்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT