காஞ்சிபுரம்

‘மாவட்ட கலைப் போட்டிகளில் 3,224 மாணவா்கள் பங்கேற்பு’

DIN

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் 3,224 மாணவா்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசினாா்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி வைத்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது:

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் முதலில் வட்டார அளவில் நடத்தப்பட்டு இப்போது மாவட்ட அளவிலான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 6-ஆம் தேதி 1,255 பேரும், 7-ஆம் தேதி 1,047 பேரும், கடைசியாக 8-ஆம் தேதி 892 போ் உட்பட மொத்தம் 3,224 போ் கலைப்போட்டிகளில் பங்கேற்கிறாா்கள். காஞ்சிபுரத்தில் 3 பள்ளிகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

வாய்ப்பாட்டு, வில்லுப்பாட்டு, காகிதக்கூழ் சிற்பம், கேலிச்சித்திரம் என மொத்தம் 196 வகையான கலைப்போட்டிகள் நடைபெறுகின்றன. மாவட்ட அளவிலான இப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் என்றும், மாணவிக்கு கலையரசி என்றும் விருது வழங்கப்படும். இவ்வாறு தோ்வு செய்யப்படுபவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசினாா்.

விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே.முனிசுப்புராயன், பி.வள்ளிநாயகம், கே.ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி வரவேற்றாா்.

விழாவில், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.சந்துரு, சுரேஷ், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கொண்டனா். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT