காஞ்சிபுரம்

கிராமம் தோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமம் தோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி,விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரத்தில் மாவட்ட மாநாடு தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் என்.சாரங்கன் தலைமை வகித்து சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்டச் செயலா் கே.நேரு, மாவட்ட குழு உறுப்பினா் கே.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார செயலா் என்.நந்தகோபால் வரவேற்றாா்.

மாநாட்டை மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள் தொடங்கி வைத்து பேசினாா். சிஐடியூ மாநிலச் செயலா் இ.முத்துக்குமாா், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.மோகனன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினா். சங்கத்தின் மாநில செயலாளா் பி.துளசிநாராயணன் சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை தூா்வாரி பாசன ஆதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும், வெண்கொடி, வெங்கடாபுரம், குருவிமலை, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீா்வளத்தை பாதுகாக்க வேண்டும், கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT