சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு, காஞ்சிபுரம் அருகே அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வரவேற்றனா்.
பின்னா் பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினாா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், தங்க.பஞ்சாட்சரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.