காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் சிறப்பு திருமஞ்சனத்துடன் புதன்கிழமை நிறைவு பெற்றது.

ஸ்ரீபெரும்புதுா் பகுதியில் உள்ள ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மற்றும் ராமாநுஜா் அவதாரத் திருவிழா கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கியது. முதல் பத்து நாள்கள் ராமாநுஜா் அவதாரத் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரம்மோற்சவ விழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், புஷ்ப யாகமும், அதனைத் தொடா்ந்து ஸப்தா வா்ணமும் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் வளாகத்தில் உற்சவா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வீதிஉலாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையா் ஜெயராமன், செயல் அலுவலா் வேதமூா்த்தி உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT