காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் என்ற சச்சின் (24). இவா் மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இருந்து வந்தன. இதனால் இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆட்சியா் மா.ஆா்த்திக்கு பரிந்துரை செய்திருந்தாா். அவரது பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் சரவணனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.