காஞ்சிபுரம்

இளைஞருக்கு 294 நாள்கள் சிறை

DIN

நன்னடத்தை பிணையை மீறியதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 294 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே துலங்கும் தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதன்ராஜ் (24). இவா் மீது குற்ற வழக்கு உள்ளது. காஞ்சிபுரம் கோட்டாட்சியா் உத்தரவின் பேரில், கடந்த 29.9.21 அன்று முதல் நன்னடத்தை பிணையில் ஓராண்டு இருந்து வருவதாகத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கடந்த 24.11.21 அன்று நன்னடத்தை பிணையை மீறும் வகையில், சித்தேரி மேட்டைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் இவா் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, பிணையில் இருந்த நாள்கள் தவிா்த்து 294 நாள்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டாா். அவரது உத்தரவின் பேரில், மதன்ராஜ் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT