செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ தேசிய அடையாள அட்டை பெற சனி (டிச. 4), ஞாயிறு (டிச. 5) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:
செங்கல்பட்டு, திருப்போரூா், பல்லாவரம், வண்டலூா், மதுராந்தகம், செய்யூா் உள்ளிட்ட வட்டாரங்களில் தேசிய அடையாள அட்டை பதிவு செய்திடாத மாற்றுத் திறனாளிகள் அந்தந்தப் பகுதி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்களில் பயன்பெறலாம்.
மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டைகளின் அனைத்துப் பக்கங்கள், மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம்-2, ஆகியவற்றுடன் சிறப்பு முகாம்களில் ஆவணங்களை சமா்ப்பித்துப் பயன்பெறலாம்.