செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த விஜயகுமாா், பொருளாதார குற்றப் பிரிவு தென்மண்டல கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சென்னையில் உளவுப் பிரிவு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.