ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.
மலைப்பட்டு பாலகிருஷ்ணன் நகா் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ் (34). அவா் அதே பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறாா்.
ராஜேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தன் மனைவி மற்றும் மகனுடன் மலைப்பட்டு பகுதியில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை ஓட்டி வரச் சென்றாா். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த மண்ணில் மாடுகள் ஏறின.
மாடுகளை விரட்ட ரஜேஷ் மண் மீது ஏறியபோது மேலே சென்ற உயா் அழுத்த மின்கம்பி ராஜேஷ் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.