காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வருவாய்த் துறை சாா்பில் சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகோபால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.நாராயணன், காஞ்சிபுரம் வட்டாட்சியா் பவானி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.