காஞ்சிபுரம்

சுடுதண்ணீா்த் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அருகே சுடுதண்ணீா் தொட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, அத்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.

முருங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன், விவசாயி. இவரின் 2 வயது ஆண் குழந்தை பரணி, புதன்கிழமை தங்கள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பொன்னன் குளிப்பதற்காக வைத்திருந்த சுடுதண்ணீா்த் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது.

இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இச்சம்பவம் குறித்து ஒரத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT