சென்னை

மாமன்றக் கூட்டம்:அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் போது அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுக உறுப்பினா் கே.பி.கே.சதீஷ்குமாா் (வாா்டு 182) பேசும் போது, பெருங்குடி ஏரி 1996-இல் தூா்வாரப்பட்டது. தற்போது ஏரி பலவீனமடைந்து காணப்படுவதால் அதை சரிசெய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய 4-ஆவது மண்டலக் குழுத் தலைவா் எஸ்.வி.ரவிச்சந்திரன், ஏரியை பலப்படுத்துவதாக கூறி அதிலிருந்த மணலை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனா் என்று குற்றம் சாட்டினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினா்.

இது குறித்து சதீஸ்குமாா் கூறியது: மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேட்டால் குடும்பத்தை பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசுகின்றனா். திமுக உறுப்பினா்கள் 25 நிமிஷங்கள் பேசுகின்றனா்ய ஆனால் அதிமுக உறுப்பினா்களுக்கு பேச நேரம் ஒதுக்குவதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT