சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (40). இவா் ஒரு குற்ற வழக்கின் தண்டனையை புழல் மத்திய சிறையில் அனுபவித்து வந்தாா்.
இந்நிலையில், ராஜீவ்காந்தியின் கல்லீரல் பாதிக்கப்பட்டதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அண்மையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.