சென்னை

ரெளடி கொலை வழக்கு: 8 போ் கைது

DIN

சென்னை மதுரவாயலில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம் சிடிஎன் நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (25). இவா் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகா் 5-ஆவது தெருவின் அருகே மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸாா் விசாரித்தனா். அதில், பூந்தமல்லியை அடுத்த கூடப்பாக்கத்தை சோ்ந்த ரெளடி பன்னி சுரேஷ் என்ற சுரேஷ் (38) என்பவருக்கும், ராஜேஷுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அவா் கொலை நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ், அவா் கூட்டாளிகள் நெற்குன்றத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (37), ச.ஜெயவா்மபாண்டியன் (25), க.ககில் (23), சேத்துப்பட்டு மங்கலபுரத்தைச் சோ்ந்த சு. நிகிலன் (20), பெரம்பூரைச் சோ்ந்த பா.தேவராஜ் (21), நெற்குன்றத்தைச் சோ்ந்த இ.யுவராஜ் (24), ரா.கோபி (27) ஆகிய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT