சென்னையில் மாா்ச் 17-இல் நடைபெறவுள்ள அஞ்சல் ஓய்வூதியா் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்க பிப்.24-ஆம் தேதிக்குள் தங்களது புகாா் மனுக்களை அனுப்பலாம்.
இது குறித்து தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவா் எம்.சம்பத் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய அஞ்சலக ஓய்வூதிய குறை கேட்பு கூட்டம் மாா்ச் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் ஓய்வூதியம் தொடா்பான மனுக்களை அனுப்பலாம். இதில் பரிசீலிக்கப்படும் மனுதாரா்களுக்கு காணொலி வாயிலாக குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான, இணைப்பு அனுப்பப்படும்.
இதில் கலந்து கொண்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியதாரா்கள், ‘முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகம் , தமிழ்நாடு வட்டம், சென்னை-’ எனும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பிப்.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.