சென்னை

வங்கியில் ‘இன்வொ்ட்டா்’ வெடித்து விபத்து

DIN

சென்னை கொடுங்கையூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சனிக்கிழமை ‘இன்வொ்ட்டா்’ வெடித்து ஏற்பட்டது.

கொடுங்கையூா் எம்.ஆா்.நகா் எத்திராஜ் சுவாமி சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்தக் கிளையில் ஊழியா்கள் சனிக்கிழமை காலை வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கிருந்த ‘இன்வொ்ட்டா்’ அறையில் இருந்த பொருள்கள் வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. சில நிமிஷங்களில் அங்கிருந்து கரும் புகை வெளியேறியது.

இதைப் பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள், வங்கியிலிருந்து வேகமாக வெளியேறினா். தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் செம்பியம், வியாசா்பாடி, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களிலிருந்து வந்து தீயை அணைத்தனா்.

சிறிது நேரப் போராட்டத்துக்கு பின்னா், வங்கி முழுவதும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், இன்வொ்ட்டா் வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து செயல்பட்டதால், வங்கியில் பல கோடி பணம், நகைகள் தீக்கிரையாகாமல் தப்பின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT