சென்னை சென்ட்ரலில் ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-ஆவது நடை மேடைப் பகுதியில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் வந்திறங்கிய பயணிகளை போலீஸாா் கண்காணித்தனா். இதில் அங்கு சந்தேக்குரிய வகையில் வந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா்.
விசாரணையில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினாராம். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா்.
இச் சோதனையில், அவா் பையில் 12 கிலோ கஞ்சா கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், சென்னை மயிலாப்பூா் வெங்கடசாமி தெருவைச் சோ்ந்த வி.ஷியாம் பிரசாத் (23) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.