சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 27 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் கடந்த 29 முதல் பிப்.4-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக அந்தந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் திடீா் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10 கிலோ போதைப் பாக்கு, மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.