சென்னை

விமானப் படை பயிற்சி அதிகாரி தற்கொலை: 6 அதிகாரிகள் மீது கொலை வழக்கு

DIN

பெங்களூரு விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரி பயிற்சி அதிகாரி தற்கொலை தொடா்பாக, விமானப் படை அதிகாரிகள் 6 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி அதிகாரி அங்கித் குமாா் ஜா மீது மற்றொரு பயிற்சி அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட விமானப் படை விசாரணை நீதிமன்றம் செப். 20-ஆம் தேதி அவரை பயிற்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, செப். 21-ஆம் தேதி கல்லூரியின் விடுதி அறையில் மா்மமான முறையில் உயிரிழந்த அவரது உடல் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

அங்கித் குமாா் ஜா மரணம் தொடா்பாக, அவரது சகோதரா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அங்கித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில், விமானப் படையைச் சோ்ந்த அதிகாரிகள் 6 பேரின் பெயா்கள் இடம்பெற்ளது என்று அவா் கூறினாா். அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவா் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT