சென்னை

சென்னையில் மின் விளக்குகளை பராமரிக்காதஒப்பந்ததாரா்களுக்கு ரூ.89.56 லட்சம் அபராதம்:மாநகராட்சி தகவல்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்பை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரா்களுக்கு கடந்த 10 மாதங்களில் ரூ.89.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் மின்துறையின் மூலமாக 2 லட்சத்து 91,415 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மின் சேமிப்பு வகை எல்.இ.டி தெரு விளக்குகளாகும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிா்பயா திட்டத்தின் கீழ் ரூ.33.57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5,594 புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் 85 உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மிகவும் துருப்பிடித்த, உயரம் குறைவான 1,997 தெரு விளக்கு மின்கம்பங்கள் புதிய மின்கம்பங்களாக மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

10 மண்டலங்களில் தெருவிளக்கு மின்கம்பங்களை இயக்கி பராமரிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி புகாா் பெறப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மின்விளக்குகளை ஒளிர செய்யாமல் இருந்தாலோ அல்லது பராமரிப்பு பணிகளுக்கான பணியாளா்கள் மற்றும் வாகனங்களை சரியான எண்ணிக்கையில் வழங்காமல் இருந்தாலோ ஒப்பந்ததாா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்தத்தின்படி, புகாா் தெரிவித்து 24 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 5 சதவீதமும், 36 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 10 சதவீதமும், 48 மணிநேரத்திற்கு மேலாக மின்விளக்குகள் சரிசெய்யப்படாமல் இருந்தால், நாளொன்றுக்கான பராமரிப்பு தொகையில் 15 சதவீதமும்அபராதமாக விதிக்கப்படுகிறது. அதனடிப்படையில், 2021 அக்டோபா் மாதம் முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மின்விளக்குகள் பராமரிப்பு பணிகளை ஒப்பந்தத்தில் உள்ளவாறு சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்தாரா்களுக்கு ரூ.89 லட்சத்து 56,296 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் மாநகராட்சியின் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒளிராத தெருவிளக்குகள் மற்றும் இதர குறைபாடுகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களுக்கு தெருவிளக்குகள் குறித்த புகாா்களை உடனடியாக தீா்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தவறும் ஒப்பந்ததாரா்களின் மீது ஒப்பந்தத்தின் படி அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT